2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாவாந்துறையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் அலுவலகம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார அலுவலகம் ஒன்று யாழ். நாவாந்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கிலும் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும்  சுபியான் மௌலவியின் தலைமையில் இந்த அலுவலகம் செயற்படவுள்ளது.

இந்த திறப்பு விழாவில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும்  சுபியான் மௌலவி, இராமநாதன் அங்கஜன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .