2025 ஜூன் 21, சனிக்கிழமை

புகையிரத பாதை நிர்மாண பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

புகையிரத பாதை நிர்மாணப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு. எல். விக்கிரமராச்சி இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

உரும்பிராய் பகுதியில் உள்ள சீன புகையிரத ஒப்பந்த நிறுவனத்திடம்  புகையிரத பாதை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றை ஒப்பந்தக்காரரெர்ருவர் மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தக்காரர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் இணைந்து புகையிரத பாதை நிர்மாணிப்பு பொருட்களை ஒழித்து வைத்ததுடன் சுமார் 64,360 ரூபா பெறுமதியான ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஏனைய பொருட்களை வேறு நபர்களிடம் விற்று 18 ஆயிரம் ரூபா காசு பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சீன புகையிரத நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன புகையிரத நிறுவனத்தின் பொறிலியலாளர் யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் தென் பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவரும் அவரது உதவியாளரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .