2025 ஜூன் 21, சனிக்கிழமை

சாவகச்சேரி கெற்பெலி பிரதேசத்தில் வீதி புனரமைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் சாவகச்சேரி கெற்பெலி பிரதேசத்தில் 1.5 கிலோ மீற்றர் நீளமான வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்;று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு புனரமைப்புப் பணியை ஆரம்பித்து வைத்தார்.
கெயார் நிறுவனத்தின் அனுசரணையுடன் பொருளாதார அமைச்சினால் 1.4 மில்லியன் ரூபா செலவில் இவ்வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

வீதியை புனரமைப்பின்  ஆரம்ப நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், கமநலத் திணைக்களத்தின் பிராந்திப்பணிப்பாளர் பற்றிக்நிறைஞ்சன் மற்றும் அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .