2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாகாணசபை முறையை தமிழர்கள் விரும்பி ஏற்றுகொண்டவர்கள் அல்லர்: சி.சிவமோகன்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'தமிழ் பேசும் மக்கள் மாகாணசபை முறையை விரும்பி ஏற்றுகொண்டவர்கள் அல்லர். இந்த தேர்தல், தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இதனை சரியாக அணுகாவிட்டால் இந்த மாகாணசபை தவறானவர்களின் கைகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுடன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்தார். 'இந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் தாயகப்பற்றுடன் வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்ய முன்வர வேண்டும். இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைதீவு மாவட்டத்தில் வாழும் மக்களின் கருத்து மிகச் சரியாகவும் திடமாகவும் பிரதிபலித்துக் காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
 
இந்த மாவட்டத்தில் பறிபோகும் பாரம்பரிய நிலங்களை தக்கவைப்பதற்கும் கலாசார அழிவுகளை தடுப்பதற்கும் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாணத்தை தலைநிமிரச் செய்வதற்கும் தமிழ் மக்கள் அனைவரும் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 'மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக அரசின் பின்புலத்துடன் எவ்வித வெட்கமும் அற்ற நிலையில் பல்வேறு முகங்ககளைக் காட்டி மக்களின் வாக்குகளை சூறையாட பலர் வந்துள்ளனர் . இத்தகையவர்களின் வலையில் வீழாமல் மக்கள் சரியான தர்மத்தின் பக்கம் நின்று வாக்களிக்க வேண்டும் என்பதே காலம் நமக்கு இட்ட கட்டளை என்பதை நாம் மறக்ககூடாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .