2025 ஜூன் 21, சனிக்கிழமை

'மக்களின் அமைதியான வாழ்வுக்காகவே வீடுகளை பிடித்து வைத்திருந்தோம்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

'மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் பெறப்பட்ட நிம்மதியை மீண்டும் புலிகள் குழப்பாமல் இருக்கவும் அவர்களிடமிருந்து மக்களை  பாதுகாக்க வேண்டும்  என்பதற்காகவுமே  1995ஆம் ஆண்டின் பின்னர் நாம் பல நூற்றுக்கணக்கான வீடுகளையும் இடங்களையும் பிடித்து வைத்திருந்தோம்' என  யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

'மக்களுடைய சொத்துக்களை விடுதலை புலிகள் பறித்து வைதிருந்த காலத்திலும் சரி படையினர் வைத்திருந்த காலத்திலும் சரி மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளளேன். அந்த வகையில் மக்களுடைய விடுகள் காணிகள் இன்று மீள கையளிக்கப்படும் நிலையில் அவர்களுடைய  மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் பெறப்பட்ட நிம்மதியை மீண்டும் புலிகள் குழப்பாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 1995ஆம் ஆண்டின் பின்னர் நாம் பல நூற்றுக்கணக்கான வீடுகளையும் இடங்களையும் பிடித்து வைத்திருந்தோம்.

இதனை நாம் படிப்படியாக பொதுமக்களிடம் கையளித்து வந்துள்ளோம். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 29,400 படையினர் நிலைகொண்டு இருந்தார்கள்.

தற்போது 13,100 படையினரே நிலை கொண்டுள்ளார்கள். படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டில் தலை தூக்க அனுமதிக்கமுடியாது.

தமிழர், சிங்களர், முஸ்லிம் என்ற இன மத வேறுபாடுகளைக் கடந்து ஒரேநாடு, ஒரே மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என குறிப்பிட்டார்

You May Also Like

  Comments - 0

  • VALLARASU. Sunday, 25 August 2013 04:29 PM

    ஐயா// கஸ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து ஒரு வீடு கட்டி பார்த்தால் , அப்போ தெரியும் அந்த வீட்டின்ட பெருமதி...ந‌ன்றி///

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .