2025 ஜூன் 21, சனிக்கிழமை

சு.க. ஆதரவாளர் மீது தாக்குதல்; சந்தேகநபர்கள் விடுதலை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

யாழ்.சாவகச்சேரி பிரதேசத்தில் வைத்து சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.சாவகச்சேரி பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மீது அப்பகுதிக்கு வந்த உறுப்பினர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இரண்டு உறுப்பினர்களும் நேற்று சனிக்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களின் குடும்பங்கள் சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததிற்கு இணங்க இன்று சனிக்கிழமை மேற்படி பிரதேசசபை உறுப்பினர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • AJ Saturday, 24 August 2013 11:34 AM

    இங்கு நடக்கும் நாடகம் வேறு எங்கும் இல்லை. பொலிஸ் எப்படி அங்கஜனிடம் கேட்டு வெளிவிட முடியும்? அவர்கள் தவறு செய்து இருந்தால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். சிரிப்பு பொலிஸ்

    Reply : 0       0

    Sumathy m Saturday, 24 August 2013 05:29 PM

    எதிர்க்கட்சிகளின் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை மண்டையன் குழு தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .