2025 ஜூன் 21, சனிக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியோருக்கு தேர்தல் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தேர்தல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்து மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறியபோதே மண்டபவாயிலில் வைத்து இந்த தேர்தல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களே  இந்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் நடைபெறும் மாகாணங்களில்  பிரச்சாரத்தை நடத்தவேண்டாமென தேர்தல் ஆணையாளரின் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அதனையும் மீறியே இந்த தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில்,  பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். முஹமட் அவர்களிடம் வினவியபோது,

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடுபூராகவும் நடைபெறுவதனால் தேர்தல் நடைபெறும் மாகாணங்களில்  மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்வதை தடுக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய நேற்றிரவு 8 மணி தொடக்கம் பரீட்சைத்தினமான இன்று 2 மணிவரை மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபவடுவதைத் தவிர்க்குமாறு தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளிற்கும் தேர்தல்  ஆணையாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இந்த செயற்பாடாது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் இல்லை என்றபோதும் தேர்தல் ஆணையாளரின் ஆணையை மீறும் செயல் என்றார்.




You May Also Like

  Comments - 0

  • AJ Sunday, 25 August 2013 11:08 AM

    அடப் பாவிகளா...! பிஞ்சுக் குழந்தைகளை படிக்க விடுங்கடா.
    படத்தில் இருக்கும் நபர் தெளிவாக தெரிகிறார். பொலிஸ் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .