2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மத்திய பஸ் நிலைய நிலவரங்கள் குறித்து ஆராய்வு ஐ.தே.க உறுப்பினர் பார்வை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஆராய்ந்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று பஸ் நடத்துனர் ஒருவர் வவுனியா தனியார் பஸ் நடத்துனரினால், தாக்கப்பட்டுள்ளதடன், தாக்குதல் சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் மற்றொருவரும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனியார் பஸ் தரிப்பிடத்தினை இடமாற்றக் கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டதுடன், தனியார் போக்குவரத்து சேவை இன்று திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், நடத்துனர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.மத்திய பேருந்து தரிப்பிட முகாமையாளரிடம் கலந்துரையாடி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு யாழ்.நகரப்பகுதியின் பல்வேறு இடங்களின் கள நிலவரத்தினையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

இச்சந்திப்பில், டி.எம்.சுவாமிநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன், காரைநகர் வேட்பாளர் பா. பாலசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .