2025 ஜூன் 21, சனிக்கிழமை

அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு?

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் வைத்தே இந்த துப்பாக்கிப்பியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும். அதிலிருந்து அவர் தப்பிவிட்டதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழகிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு யாழ்.நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீசாலை வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொண்டு திரும்பும்போதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தனக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்த வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும்,அங்கஜனின் தந்தையே தன்னை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தான் அதிலிருந்து தப்பிவிட்டதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றுமொரு வேட்பாளரான எஸ். சர்வானந்தா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • kavi kamban Tuesday, 27 August 2013 04:06 PM

    தோல்வியை சந்திக்க போகும் கூட்டம் அடாவடி செய்யதான் செய்யும். ஆனால் மகுடம் எம் அண்ணன் தலைக்கே வெற்றி நிட்சயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .