2025 ஜூன் 21, சனிக்கிழமை

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும்: சேனாதிராசா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா, கு.சுரேன்


'சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் மூலம் தீர்க்கவேண்டும். அதனைவிடுத்து இறுதி யுத்தத்தின் படுகொலைகளுக்கும், காணாமற்போனோர்களுக்கும் அவரே முழு முதற் காரணம் என்று கூறுவது தவறானது' என ஜனநாயக கட்சியின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளர் சேனாதிராசா கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகாவின் தலைமையில் கீழிருக்கும் ஜனநாயக மக்கள் கட்சியில், நாங்கள் போட்டியிடுவதற்கான முக்கிய காரணம், சரத் பொன்சேகாவின் திடமான கொள்கைகளும், எதிர்காலத்தின் மீது அவருக்குள்ள சாதகமான நம்பிக்கையுமே ஆகும்.

புதிய கட்சியான எங்களை வடக்கு மாகாண சபையில் மக்கள் ஆதரிக்க வேண்டும். எங்களுக்கான சந்தர்ப்பத்தினை அளிக்கும் போது நாம் புதிய வழிகளில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

அத்துடன்,  பொருளாதார இறுக்க நிலையிலிருக்கும் வடமாகாண மக்களினை அந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிகளினை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் நிற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .