2025 ஜூன் 21, சனிக்கிழமை

கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால், கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

 அத்துடன், வீட்டின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்  நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் இவ்வாறான சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாகவும், அதே சமயம் வீட்டு வளவிற்குள் இருந்த கிருஸ்ணர் ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கும் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாக ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .