2025 ஜூன் 21, சனிக்கிழமை

'பெண்மையின் பக்கங்கள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

திருமதி ரவிந்திராகலாவினால் எழுதப்பட்ட 'பெண்மையின் பக்கங்கள்' என்னும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மணிக்கு மானிப்பாய் வீதி உடுவிலில் அமைந்துள்ள இளையதம்பி பாலர் பாடசாலை வளாகத்தில் வண அருட்திரு இ.ராஜ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்டர் அலஸ்ரின், சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், பிராந்திய இணைப்பாளரும் பெண்ணியல் ஆய்வாளருமான திருமதி ரஜனி சந்திரசேகரம், ஒய்வுபெற்ற கிராம அலுவலர் எஸ்.ஆர்.ஜேசுபாலனும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

நூலினை செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் வெளியிட்டு வைக்க உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமல்ஸ் முதற்பிரதியைப் பெறவுள்ளார்.

நூலின்ஆய்வுரையை உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் எஸ்.பி.சாந்தகுமார் நிகழ்த்தவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .