2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஏழாலை மாணவியை காணவில்லை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஏழாலை மேற்கு கோட்டைக்காட்டை சோந்த 16 வயதான மாணவியை கடந்து நான்கு நாட்களாக காணவில்லை என்று பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவியே வீடு திரும்பவிலையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகத்திலுள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண வகுப்பில் கல்விகற்று வரும் இம்மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை மேலதிக வகுப்பிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

 நகுலேஸ்வரன் நளிர்வனா என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த முறைபாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியை அவரது தந்தையே குறித்த தினத்தன்று  வகுப்பில் விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாடு  தொடர்பில்,  சுன்னாகம் பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .