2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ்.இராணுவத் தளபதி புதிய கட்சி ஆரம்பித்தார்: மனோ

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

'யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றும்  மஹிந்த ஹத்துருசிங்க யாழில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரத்பித்துள்ளார். அக்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 24 ஆவது கட்சியாக உள்ளது' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 23 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 24 ஆவது கட்சி ஒன்றை ஹத்துருசிங்க நெறிப்படுத்தி வருகின்றார். இதுதான் சாவகச்சேரியில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணில் உள்ள சுத்திரக்கட்சியுடன் மோதிக்கொண்டிருக்கின்றது.

இது அவர்களின் கட்சிப் பிரச்சனை. அதுதொடர்பில் எமக்கு அக்கறையில்லை. இருந்தாலும் இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கே ஹத்துருசிங்க முயற்சிக்கின்றார்'  என்று மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், ஜனநாயக் மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபாஸ்கரா, குகவரதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .