2025 ஜூன் 21, சனிக்கிழமை

'மாகாண சபை அபிவிருத்திக்கானதே தவிர அரசியல் மாற்றத்திற்கானதல்ல'

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'மாகாணசபை அபிவிருத்தி நோக்கியதாக இருக்குமே தவிர அரசியல் மாற்றத்தினைக் கொண்டதாக இருக்க முடியாது' என நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் பூட்டு சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் கிருஸ்ணன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுவரொட்டிக்கு மையடிப்பதில்லை. ஆனால், சுயேட்சைக் குழுவின் இளைஞர் அணியின் சுவரொட்டிகளுக்கு மையடிக்கிறார்கள்.

அது என்ன நியாயம். உள் கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. கட்டாயம் உட்கட்சிகளும் உள்பூசல்கள் இருந்தே ஆக வேண்டும்.

தமிழ் இனம், தமிழ் மக்களின் அபிலாசை, சுயநிர்ணய உரிமை வென்றெடுப்பதே எமது இளைஞனின் குறிகோள் ஆக இருக்கின்ற பட்சத்தில், முன்னர் இருந்த இளைஞர் அணியினரும் அதையே நடைமுறைப்படுத்தி இருந்தார்கள்.

அந்த வகையில் இன்றைய இளைஞர்களுக்கு எவ்வாறு அங்கீகாரம் கொடுக்கப்போகின்றார்கள் என்பது முக்கியமான விடயம்.
தமிழ் மக்களை யாழ். மாவட்ட அரசியல்வாதிகள் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றார்கள். அதற்கு தமிழ் மக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

தமிழன் ஆளப்பிறந்தவர்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களின் சிந்தனைகளை திசை திரும்பி சதி வேலைத்திட்டம் செய்கின்றார்கள்.

இவ்வாறான விடயங்களை புறக்கணிப்பதுடன், தமிழ் மக்கள் சிந்தித்து புத்திசாலித்தனமாக ஆயுதக் கலாசாரம் இல்லாத வகையில் அறிவியல் தலைவரை நிறுத்தவேண்டிய கட்டாயம் இருக்கின்றது' என அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .