2025 ஜூன் 21, சனிக்கிழமை

கைப்பேசி திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நல்லூர் ஆலய சூழலில் கையடக்கத் தொலைபேசி திருடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை குறித்த பெண் தனது குழந்தையுடன் சென்று ஆலய சூழலில் இருந்த நபர் ஒருவரின் கைடயக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணையும், குழந்தையையும் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ். நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், குழந்தையை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், பெண்ணை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .