2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வாதார கடன் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தவர்களாகவுள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது

உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் கலந்துகொண்டு இக்கடனுதவிகளை வழங்கினார்.

இதில் யாழ்.மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தவர்களாகவுள்ள 206 பேருக்கு இக்கடனுதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக வடமாகாணசபையினால் 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு கடனாக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், கூட்டுறவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அருந்தவநாதன் மற்றும் கூட்டுறவுத்திணைக்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .