2025 ஜூன் 21, சனிக்கிழமை

சகலரும் இனவாதப் பூச்சாண்டிகள்: சந்திரசேகரன்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'இனவாத்தினை தூண்டிவிட்டு தமது இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கே அனைத்துக் கட்சியினரும் முயற்சிக்கின்றனர். தவிர, இனவாதங்களுக்கு எதிராகவோ அல்லது இந்த நாட்டின் ஐக்கியத்துக்காகவோ எந்தவொரு கட்சியும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை' என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சந்திரசேகரன், 'இனவாத்தினை பூச்சாண்டி காட்டி, அராஜகம், சர்வாதிகாரம், குடும்ப ஆட்சியினை நடத்தி வருகின்ற இந்த அரசாங்கமே இனவாதத்துக்குப் பின்னால் துணை நிற்கின்றது' என்றும் சுட்டிக்காட்டினார்.

'அராஜகதனமான ஆட்சிக்கு எதிராக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், மறுபக்கம் தமிழரசு கட்சியாக இருக்கட்டும், தமிழ் முஸ்லிம் கட்சிகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் மக்களை பிரிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், இன அடிப்படையில் தமது இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையினையே எடுக்கிறார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'மாகாணசபை தேர்தலில் விசேடமாக மக்கள் விடுதலை முன்னணி இன ஒற்றுமையினை வலுப்படுத்துவதற்காக போட்டியிடுகின்றது. மீண்டும் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. இனவாத்தின் மூலம் மக்களின் பிரச்சினையினை தீர்க்க முடியாது.

இனவாதம் எந்த மக்களுக்கும் சேவை செய்யாது. இனவாதம் மக்களை தனிமைப்படுத்துகின்ற மக்களை பிரிக்கின்ற மக்களை சீர்குலைக்கின்ற செயற்பாடாக இருக்குமே தவிர வேறு எந்த செயற்பாட்டினையும் முன்னெடுக்காது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்வது சகல விதமான இனவாத்திற்கும் எதிராக சகல மக்களும் எதிர்காலத்தில் அணிதிரண்டு போராட வேண்டிய நிலை இருக்கின்றது. அந்த வகையில், மக்கள் விடுதலை முன்னணியானது மக்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில், மக்கள் விடுதலை முன்னணியினரை ஆதரிக்குமாறும், வடமாகாணசபை தேர்தலில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்' என்றார்.

'அனைத்துப் பலங்களையும் பிரயோகித்து நடத்தவுள்ள வடமாகாணசபை தேர்தல் நீதியான முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் கிரீடத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

ஏனைய மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெறும் போது, அரச வன்முறைகள், அதிகாரங்கள் பிரயோகிக்கப்படும் தேர்தலாகவே வடமாகாண சபை தேர்தல் நடைபெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றதாக' அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினரை முகாமுக்குள் முடக்குவதென்பது பிரச்சினை அல்ல. வடக்கில் சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் பொலிஸார் என்ற ரீதியில், எந்தெவாரு கடமைகளிலும் இராணுவத்தினரின் தலையீடுகள் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்.

அத்துடன், அடக்குமுறைகளில் இருந்து இராணுவம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். இராணுவத்தினரை முகாமிற்குள் அடக்குவதென்பது பிரச்சினையான விடயம் அல்ல. இராணுவத்தின் தலையீடுகள் இன்றி வடமாகணசபை தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .