2025 ஜூன் 21, சனிக்கிழமை

சு.கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடான விசேட சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்.இராதநாதன் வீதியில் உள்ள ராஜப கிறீம் ஹவுசில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொணடனர்.

இச் சந்திப்பில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி, அதற்காக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இன்றைய இச் சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சபை, மின்சார சபை, சமூர்த்தி அதிகார சபை, இலங்கை ஒளிபரப்புக்கூட்டுதாபனம், போன்ற நிறுவனங்களைப் பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .