2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த அரசு தமிழ் மக்களை பிரித்தாள பிறந்தது: டில்வின் சில்வா

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


மகிந்த ராஜபக்ஷ அரசு தமிழ் மக்களை பிரித்தாள பிறந்து தமது நோக்கத்தினை பூர்த்திசெய்து கொள்வதாக மக்கள் விடுதலை முண்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (7) இடம்பெற்ற 'தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான அணுகுமுறை' என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவில்லை. அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசு செவி மடுக்கவில்லை.

அதேவேளை, மஹிந்தராஜபக்ஷ அரசுக்கு தமிழ் மக்களை பிரித்தாளும் கொள்கை இன்றும் இருக்கின்றது. அந்த எண்ணத்தினை விட்டு தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இலங்கையினை ஆட்;சி செய்யும் ஆட்சியாளனுக்கு தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு  இனவாதம் இன்னும் தேவைப்படுகின்றது. அதனால்தான் தமிழ் மக்களுக்கான உரி;மைகளை சமத்துவத்தின் அடிப்படையில் வழங்காது இனவாத்தினை பற்றி பேசுகின்றார்கள்.

சோசலிச சமத்துவத்திற்காக காத்திருக்காது, அரசை வற்புறுத்தி சமத்துவத்தினையும், ஜனநாயக உரிமையினையும் பெற்றுகொள்ள முனைய வேண்டும்.

அந்த வகையில், சமூதாயத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாளித்துவத்தின் இரண்டு இருக்கின்றன. அதில் அணுகுமுறை, பலவந்தமாக ஒடுக்கி பிரிவினையினை கையாளுதல் போன்றனவாகும். அதில் அணுகுமுறை தேசிய பிரச்சினையினை தீர்;க்க சொல்லும்,

இரண்டு வகையான அணுகுமுறையினை கையாள்வதற்கு ஜனநாயக ரீதியில் ஒருங்கிணைந்து பண்முகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அத்துடன், மக்கள் ஆணையினை பிரதிபலிக்கும் வகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழிக்க வேண்டும். எனவே, அனைத்து மக்களும் தனித்துவத்தினை பாதுகாத்து, இவ்வாறான விடயங்களுக்கு முட்டுக் கட்டையிட்டு அடக்க வேண்டுமென்றும்.

அதேவேளை, வடபகுதியில் மொழி, கலாசாரம், பண்பாடு, உரிமை மீறல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான மீறல்களை இல்லாது ஒழிப்பதற்கு மக்கள் சபை உருவாக்கப்பட வேண்டும், அவ்வாறு உருவாக்கப்படும் மக்கள் சபையில் மக்கள் கோரும் அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்படும்.

அதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .