2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த நபர்கள் தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அச்சுதன் அறிவித்துள்ளார்.

நடமாடும் சேவைகள் ஊடாக அடையாள அட்டைக்கு விண்ணப்பத்தவர்கள் அடையாள அட்டை வழங்கும் வரையான காலப்பகுதி வரைக்கும் காத்திருக்காது, தற்கால அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை தமது கிராம சேவையாளர் ஊடாக எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், கடவூச் சீட்டு, நடைமுறையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியம் பெறுபவராயின் ஓய்வூதிய அடையாள அட்டை, அல்லது, 2011ஆம் தேர்தல் திணைக்கள அடையாள அட்டை போன்றவற்றினை கால நீடிப்பு செய்து நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் வாக்களிக்க முடியுமென்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .