2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கா ரெலிகொம் ஊழியர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

யாழ் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர் ஒருவர் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மேற்படி ஊழியர் தான்வந்த  ஆட்டோவினை நிறுத்திவிட்டு  ரெலிகொம் இணைப்புக்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருநதுள்ளார்.

அவ்வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த அந்த நிலையத்தின் முகாமையாளர் தனது வாகனத்தைத் தரிப்பதற்கு ரெலிகொம் ஊழியரின் ஆட்டோவினை அகற்றும் படி கோரியுள்ளார்.

அதற்கு ரெலிகொம் ஊழியர் 5 நிமிடங்களில் எனது வேலை முடிவடைந்து விடும் அதன்பின் ஆட்டோவை அகற்றுகின்றேன் எனக் கூறுயுள்ளார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத அந்த முகாமையாளர் ரெலிகொம் ஊழியரினைத் தாக்கியுளளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ் ரெலிகொம் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .