2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்திற்கு பின் விவசாயத்தில் மறுயுகம் ஏற்பட்டுள்ளது; ஹால்டின்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாணத்தில் கடந்த 04 வருடங்களுக்கு பின்னர் விவசாயத்தில் எற்பட்ட மறுமலர்ச்சி விவசாயத்துறைக்கு கிடைத்த மறுயுகம் என வடமாகாண விவசாய மற்றும் கால்நடைத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்டீன் தெரிவித்தார்.

வடமாகாண விவசாய திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்ற ஊடவியாளர்கள்  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மூல்லைத்தீவு,மன்னார்,வவுனியா,ஆகிய 05 மாவட்டங்களிலும் 2,04,700 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையும்,1,57,282 ஏக்கர் நிலப்பரப்பளவில் மேட்டுநிலபயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகளில் வடமாகாணத்தில் 1,57,191 குடும்பங்கள் விவசாயத் தொழில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும், யுத்த காலத்தில் இருந்த விவசாய நிலங்கள்; பெரிதும் கைவிட்டியிருந்தன 2009 ஆண்டுக்கு பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இவ் அரசாங்கம் சகல விவசாய நிலங்களையும் பயிர்செய்கை பண்ணக்ககூடிய நிலமாக மாற்றியுள்ளது.

வடக்கின்; வசந்தம்  மீள் திட்டத்தின் ஊடாக 2009 ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் 4450 மில்லியன் ரூபா செலவில் திட்டங்கள், வடமாகாண விவசாயிகளுக்கான நிவாரணம், நிதி உதவிகள், மானியங்கள் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், உட்கட்டுமான அபிவிருத்திகள் என்பன முன்னேடுக்கப்பட்டன. எனினும் 92 வீதமான நிலங்கள் விவசாய செய்கையில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றதாக மேலதிக நிலப்பரப்புகளும் விவசாய செய்கைகளுக்கு ஈடுபடுத்தப்படும். எனவும் குறிப்பிட்டார். 

மேலும் 30 வருடகாலமாக கைவிடப்பட்ட விவசாயப்பயிர்செய்கைநிலங்களுக்கு 502,000 புசல் புதியவகை விதைஇனங்களும் வழங்கப்பட்டன. மேலும் வடபகுதி விவசாயிகளுக்கு 31,181 மெற்றிக்தொண் பசளைகளும் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வடமாகாணத்தில் 2009 ஆம் ஆண்டளவில் 8,196 மெட்ரிக்தொன் நெல்உற்பத்தி மாத்திரம் கிடைத்தது. அதன் பின் 04 வருடங்களின் 34,454 மெட்ரிக்தொன் நெற்உற்பத்தி அதிகரித்துள்ளளது. அதேவேளை, தானிய வகைகளில  ;உழுந்து, பயறு,கவுப்பி, கச்சான்,எள்ளு, வெங்காயம், குரக்கன், சாமை, மற்றும் பழவகைகளில் அன்னாசி, மாம்பழம்,கொய்யா, மாதுழை, வாழை,பிலா, மரமுந்திரிகை;, திராட்சை, மற்றும் மரக்கறிவகைகளில் கத்தரி, வெண்டி, மரவள்ளி, மிளகாய், பயிற்றை, கறிமிளகாய், முருகங்காய், பிற்றூட், கரட், ஆகிய உற்பத்திகளில் வடமாகாண 04 வருடங்களில் தன்றிரைவுபெற்ற மாகாணமாக கண்டுயிருக்கின்றது. 

இதில் 2009 ஆம் ஆண்டு 56,503 மெற்றிக்தொண்ணாக காணப்பட்ட மரக்கறி உற்பத்தி தற்போது 112,600 மெற்றிக்தொண்ணாக உயர்வடைந்து காணப்படுகின்றது. மேலும் 2009 ஆம் ஆண்டு 86,033 மெற்றிக்தொண்ணாக காணப்பட்ட பழஉற்பத்தி தற்போது 119,130 மெற்றிக்தொண்ணாக அதிகரித்துள்ளது.

மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினது,வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாகவும் விவசாயப்பயிற்சி நிலையங்களுக்காக (திருநெல்வெலி,வட்டக்கட்சி,மூல்லைத்தீவு,ஓட்டிசுட்டான்,) பாரிய அளவில் உட்கட்டுமான மீள் வசதிகளும், பயிர்ச்செய்கை ;கூடிய நிலங்களை மேன்படுத்தல் தொடர்பாகவும் திட்டங்கள் முன்னேடுக்கபட்டுயிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .