2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள், வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்வதற்காக வீடு மற்றும், வர்த்தக நிலையங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .