2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில்  மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பிரதேச சபையின் வாகனம் ஒன்றும் சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஊழியர்கள், கழிவுகளை கோண்டாவில் பகுதியில் அகற்றிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர்களைத் தாக்கியுள்ளதுடன் பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தையும் சேதமாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் த.குணசேகரம், கு.விபுந்தன், ச.ஜெகதீஸவரன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .