2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞனை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதுடன் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கையில்,
 
2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி 14 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரான மேற்படி இளைஞன் இதுவரை காலமும் தலைமறைவாகியிருந்தார்.
 
இந்நிலையில் மேற்படி இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டு, நேற்று (30) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
 
நீதவான் மேற்படி சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கும் அன்றைய தினம் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .