2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய இரு சகோதரர்கள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். மண்டைதீவு மகா வித்தியாயலத்தில் கல்வி கற்கும் மாணவர்களான இரு சகோதரர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ். நாவலர் வீதியினைச் சேர்ந்த தர்மலிங்கன் யதுசன் (13), தர்மலிங்கம் விதுசன் (10) இருவருமே குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.
 
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
 
மேற்படி இரு சகோதரர்களும் பாடசாலை முடிவடைந்ததும் யாழ். நகரத்திலுள்ள தங்கள் வீட்டிற்கு வருவதற்காக பஸ்ஸிற்காகத் காத்திருந்த போது, இளைய சகோதரரை குளவி மொய்த்துக் கொண்டது.
 
இதனை அவதானித்த மூத்த சகோதரன், தம்பியைக் காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .