2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெளிநாட்டு பிரதிநிதிகள் - யாழ். அரச அதிபர் சந்திப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


பொதுநலவாய மாநாட்டிற்காக வருகை தந்த 48 வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்கள் பற்றி அரச அதிபர் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கின்றார்.

நேற்று (13) இரவு யாழ்ப்பாணம் வருகை தந்த மேற்படி வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (14) காலையில் நயினாதீவுக்குச் சென்றிருந்ததுடன், தொடர்ந்து யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .