2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர சபை வரவு - செலவுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: விஜயகாந்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபை வரவு - செலவு திட்டத்தினை உரிய அமைச்சர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென யாழ். மாநகர சபையின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'மாநகர சபையின் வரவு - செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், இந்த வரவு செலவு திட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை.

2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 595 மில்லியனை மாநகர சபையின் வருமானமாக எதிர்பார்க்கின்ற போதும், அதிலிருந்து 18 மில்லியன் ரூபாவினையே பொதுமக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பாலான நிதி மாநகர சபையின் உட்கட்டமைப்பு பணிக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றினை நிறைவேற்றுவதற்கான வரவு - செலவு திட்டமாக இது இல்லை.

வரவு - செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பிக்கும் போது, எத்தனை பேர் ஆதரவாக வாக்களித்தார்கள், எத்தனைபேர் எதிராக வாக்களித்தார்கள் என்பது முக்கியமாக வெளிப்படுத்தப்பட வேண்டிய விடயம்.

அத்துடன், வரவு - செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பிக்கும் போது வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் அந்த வரவு - செலவு திட்டத்தினை ஒருவர் முன்மொழிய இன்னொருவர் வழிமொழிய வேண்டும்.

ஆனால் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களுக்கு பயன்தக்க விதத்தில் இந்த வரவு - செலவு திட்டத்தினை உரிய அமைச்சர்கள் மீள்பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .