2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கர்ணன்

யாழ். பருத்தித்துறையில் படகில் மீன்பிடிக்க சென்ற நபர் கடற்கொத்தளிப்பால் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை உயிரிழந்துள்ளார்.

திக்கம் நாச்சியம்மன் கோயிலடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கைலாயபிள்ளை குணரத்தினம் (57) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பருத்தித்துறை இன்பறுட்டி கடலில் நேற்று திங்கட்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த நபருடன் இன்னொருவரும் சேர்ந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலை முடிந்துக்கொண்டு கரையை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட கடல் கொத்தளிப்பினால் படகு கவிழ்ந்து, குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் சிறு காயங்களடன் கரையை அடைந்தார்.

மேற்படி நபரின் சடலத்தை பருத்தித்துறை பொலிஸார் மீட்டதுடன், சடலத்தை பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சாதானந்தம் சிவராஜா மரண விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .