2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையில் அரைக்கம்பத்தில் பறந்த கொடிகள்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


மறைந்த முன்னாள் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபையில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போது, தேசியக்கொடியும் மாகாண சபை கொடியுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு சபையிலும் அஞ்சலியும்  செலுத்தப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றும் நாளையும் அரசாங்கம் துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .