2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் தார் பரல் திருட்டு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வாளகத்தில் வைக்கப்பட்டிருந்த தார் பரல் ஒன்று நேற்றிரவு (16) திருடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதினால் யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களகத்திற்கு சொத்தமான தார் பரல்கள்; குறித்த கைத்தொழிற்பேட்டை வாளகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்றிரவு (16) சிறியரக வாகனத்தில் வந்த திருடர்கள் குறித்த கைத்தொழிற்பேட்டைக்கு பின் பகுதியினால் உள்நுழைந்து அங்கிருந்த தார் பரல்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த காவலாளிகள் சத்தம் போட்டதையடுத்து திருடர்கள் ஒரு தார் பரலோடு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .