2025 ஜூன் 25, புதன்கிழமை

இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான தந்தை ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே தனது 13, 14 வயதுடைய இரு மகள்களையும் பாலியல் துஷ;பிரயோகம் உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று (09) தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து எங்கள் தந்தை எங்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருவதாக குறித்த சிறுமிகள் தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தைப் பிரிவிற்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தனர்.

தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ரி.திருமாறன் இது தொடர்பாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபரர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (10) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், மேற்படி நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பாதிப்புக்குள்ளான சிறுமிகளை யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிப்பதுடன் அவர்கள் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Friday, 10 January 2014 02:19 PM

    இது என்ன கீழ்த்ரமான தகப்பன்? இவர்கள் போன்றவர்களுக்கு சிறைவாசம் சரிப்பட்டு வராது. சித்திரவதை செய்து சிறுகச் சிறுக கொல்வது தான் மிக குறைந்த தண்டணையாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .