2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்க முற்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்'

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வளிக்க முற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்  இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அடுத்த மாதம் nஐனீவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதனாலேயே இங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதனொரு செயற்பாடாகவே தமிழ் இனத்திற்காக போராடி வருகின்ற அனந்தி சசிதரன் போன்றோரை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களை மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்புதல், அதேபோன்று பலரை புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுமென எச்சரிக்கை செய்தல், புதிதாக பலரை புனர்வாழ்விற்கு அனுப்புதல் போன்ற மிக கேவலமான செயல்கள் இங்குதான் இடம்பெறுகின்றன.

குறிப்பாக தனது கணவரை காணாமல் தேடி அலையும் சாதாரண குடும்பத் தலைவியாக போராடியவர், இன்று மக்கள் ஆணையுடன் தன்னைப் போன்ற பிரச்சனைகளையுடைய குடும்பங்களின் தலைவியாகவும் மக்களுடன் மக்களாக நின்று தனது இனத்திற்காக சக உறுப்பினர் அனந்தி சசிதரன் போராடி வருகின்றார்.

இவ்வாறு தமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுகின்றவர்கள் மற்றும் இந்த இனத்திற்காகப் போராடுகின்ற அனந்தி சசிதரன் போன்றவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதும்; மிரட்டப்படுவதுமான சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்படுகின்றன.

இவ்வாறு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. ஆயினும் அரசின் இத்தகைய செயற்பாடுகளினால் நாம் பயந்து விடுவோமென அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் நாம் ஒரு போதும் பயப்படப்போவதில்லை  மாறாக இந்த அரசாங்கமே nஐனிவாக் கூட்டத் தொடரை நினைத்து நினைத்து பயப்படுகின்றது.

அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் முற்பட்டால் அது மிக மோசமான நிலையைத் தோற்றுவிக்கும். குறிப்பாக தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவது போன்றதாகவே அமையும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .