2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கசிப்பு வைத்திருந்த நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  ஐவரில் 04 பேருக்கு 60,000 ரூபா தண்டம் விதித்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.விஜயராணி, மற்றையவரை  50,000 ரூபா ரொக்கப்;பிணையிலும் 75,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.

நாகேந்திரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டவரே ரொக்கப்பிணையிலும் சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

பிரமந்தனாறு பகுதியில் ஜனவரி 30ஆம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அரைப் போத்தல் கசிப்புடன் இருவரையும் தர்மபுரம் பகுதியில்  ஜனவரி 30ஆம் திகதி 02 போத்தல் கசிப்புடன் இருவரையும் கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்தனர்.  இவர்கள் நால்வருக்கும் 15,000 ரூபா படி 60,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .