2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கடலாமைகளை பிடித்தவர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். பாசையூர் கடலில் மூன்று கடலாமைகளை பிடித்து தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தவரை இன்று கைது செய்ததுடன் அவரிடமிருந்த மூன்று கடலாமையினையும் கைப்பற்றியதாக யாழ். பொலிஸ் நிலையத்தின் சட்டவிரோத தடுப்பு பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டிற்கு இன்று சென்ற போதே, கடலாமைகளை பிடித்து வைத்திருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.இவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .