2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நல்லூரில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் மேற்கு புறத்திலுள்ள வீதியிலிருந்து யாழ். அரசடி வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சுந்தரமூர்த்தி (வயது 72) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை  (09) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

தினமும் காலையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்து செல்லும் இவர், வழமைபோன்று  இன்றையதினமும் வீட்டிலிருந்து புறப்பட்டுவந்தபோது  இயலாமல் இருப்பதாகக் கூறி உட்கார்ந்து அப்படியே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .