2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பார்வை அற்றோருக்கான வீதிக்கடவைகள் வடபகுதியிலும் வேண்டும்: ரூபராஜ்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கண் பார்வையற்றவர்கள் வீதிகளைக் கடப்பதற்கு ஏற்ற வகையில் விசேட மாபிள் அமைப்புடனான வீதிக் கடவைகளை  வடபகுதி வீதிகளிலும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  கோரியதாக  வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத் தலைவர் எஸ்.ரூபராஜ் தெரிவித்தார்.

சமூக சேவைகள் அமைச்சிற்கு சனிக்கிழமை (15)  அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

தலைநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இவ்வாறான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், வடபகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் எதிலுமே இவ்வாறான விசேட நடைபாதைகள் எதுவும் அமைக்கப்படவில்லையெனவும் அவர் கூறினார்.

ஓமந்தை முதல் காங்கேசன்துறைவரை அமைக்கப்படும் புகையிரத நிலையங்களில் கண்பார்வையற்றோர் நடந்துசெல்லக்கூடிய வகையில் விசேட மாபிள்களை கொண்ட நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. அவ்வாறே வடபகுதியிலுள்ள வீதிகளிலும் விசேட மாபிள்களைக் கொண்ட நடைபாதைகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .