2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பண்டத்தரிப்பிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து  04 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதென்று  வீட்டு உரிமையாளரான கந்தன் நடராஜா முறைப்பாடு செய்ததாக  இளவாலை பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை (16) காலை உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பியபோது, வீட்டின் கூரையினூடாக திருடர்கள்  உள்நுழைந்து 180,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள்,  மடிக்கணினி, வீட்டு உபகரணங்களை திருடியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .