2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபையில் அங்கஜனுக்கு பாராட்டு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 18 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவிகளை வழங்கியதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று (18) பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் இன்று (18) நடைபெற்ற 6ஆவது அமர்வின் போதே இந்த பாராட்டை விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  'யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகழள சந்தைப்படுத்த முடியாத நிலையில் எமது விவசாயிகள் இருந்தனர்.

இதுதொடர்பில் விவசாய அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து இதனை சந்தைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்காக அங்கஜனோடு தொடர்பு கொண்ட போது, அவர் உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனால் வடமாகாண விவசாய அமைச்சின் சார்பிலும் வடமாகாண விவசாயிகள் சார்பிலும் அங்கஜனுக்கு நான் பாராட்டையும் நன்றிகளையும் இந்த சபையில் தெரிவிக்கின்றேன்' என்றார்.

இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், 'சரியாகச் செய்தால் நன்றி! ஊழல் செய்தால் தண்டனை!' என்று கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .