2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் சிவில் பாதுகாப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு அபிவிருத்திக்குழு கூட்டம் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

இதில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டு சிவில் பாதுகாப்பு மேம்படுத்தல் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதன்போது, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்  'வடமாகாணத்தில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், கையூட்டு, பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துதல் தொடர்பான கருத்துரைகளை வழங்கினார். 

இக்கூட்டத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், மதகுருமார், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .