2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கார்த்திகேசு நிரூபனின் நிலைமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்றினை வெள்ளிக்கிழமை (21) முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

இந்தக் கறுப்புப்பட்டிப் போராட்டம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், மேற்படி போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது காணாமல் போன நிரூபன், இம்மாதம் 12 ஆம் திகதி மாங்குளம் பகுதியில் உள்ள காட்டில் இருந்து எலும்புக் கூடாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .