2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான், வி.விஜயவாசகன்


ஏ – 9 வீதியில் யாழ். தென்மராட்சி உசன் சந்தியில் செவ்வாய்க்கிழமை (01) காலை இடம்பெற்ற வாகன விபத்தில்  படுகாயமடைந்த இருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவில் பகுதியிலிருந்து ஏ – 9 வீதி வழியாக கொடிகாமம் நோக்கிப்; பயணித்த உழவு இயந்திரத்தின் பின்னால் கொழும்பிலிருந்து யாழ். நோக்கிப் பயணித்த கூலர் ரக வாகனம் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தின் பெட்டி கவிழ்ந்ததால்  அதில் பயணித்த மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத்தைச் சேர்ந்த அருளம்பலம் விக்னேஸ்வரராஜா (வயது 56), கந்தையா செல்லத்துரை (வயது 65) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .