2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் தமிழ் சிங்களப் புத்தாண்டு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கலை மற்றும் கலாசாரம் கலை அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள கலாசார திணைக்களத்தினால் தமிழ் சிங்களப் புத்தாண்டினைக் கொண்டாடும் முகமாக 'உறவுப் பயணம்' எனும் தொனிப்பொருளிலான கலை நிகழ்வுகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (1) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மேற்படி கலை நிகழ்வுகளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள கலைஞர்கள் மற்றும் தென்மாகாணத்தில் உள்ள 200 மேற்பட்ட கலைஞர்கள் அழைக்கப்பட்டு நடன நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதற்காக யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளின் கீழுள்ள கலைஞர்களின் விபரங்களை திரட்டி கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறு கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரதேச செயலகங்களிடம் கோரியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 29 ஆம் திகதி உலக நடன தினம் அனுஷ;டிக்கப்படவுள்ளதால், பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடமபெறவுள்ளன.

இக்கலைநிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெரும் கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன், விருதுகளும், 15 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கனுகல தெரிவித்தார்.

30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது சமூகத்திலிருந்து விடுபட்டு சென்ற வடக்கு கிழக்கு மக்களின் சமாதான பாலத்தினை மீண்டும் நிறுவி அதன் மூலம் வடக்கு தெற்கு கலைஞர்களை ஒன்றிணைத்து பெரும் சக்தியினை உருவாக்குதல் என்னும் நோக்கிலேயே இந்நிகழ்வை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களின் செயலர்கள், கலை மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .