2025 ஜூன் 28, சனிக்கிழமை

கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர் கஞ்சாவுடன் கைது

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இனந்தெரியாதோரல் கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட ஒருவரும் அவருடைய நண்பர் ஒருவரும் 3 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதி, சங்கானையைச் சேர்ந்த துரைராஜா பிரபாகரன் என்ற நபரும் அவருடைய நண்பருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்கிய மேற்படி நபரும் அவரது நண்பரும் புல்லுக்குளத்திற்கு அருகில் வைத்து நால்வர் கொண்ட குழுவினரால் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள்  யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

எனினும் குறித்த நபரும் கல்முனையினைச் சேர்ந்த பிறிதொரு நபரும் 360,000 ரூபா  பெறுமதியுடைய 3 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ். பேரூந்து நிலையத்தில் வைத்து செவ்வாயன்று காலை, பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .