2025 ஜூன் 28, சனிக்கிழமை

நல்லூர் பிரதேச செயலரை பின்தொடர்ந்தோர் குறித்து முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இனந்தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில் நந்தனன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (01) முறைப்பாடு செய்துள்ளார்.

அலுவலக கடமைகளுக்காக தனது வாகனத்தில் நல்லூர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாஇணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .