2025 ஜூன் 28, சனிக்கிழமை

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன் அதன் தலைவராக ஒய்வுபெற்ற கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.தியாகலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிற்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண பேரவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .