2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு 9 மணியளவில் புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் தாக்குதலுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் கம்பிகளினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

துரத்தித் துரத்தி இவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அபாய குரல்கேட்டு  அவ்விடத்திற்கு மக்கள் விரைந்ததையடுத்து தாக்குதல் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாக நெல்லியடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .