2025 ஜூன் 28, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியை கைவிட்ட கொட்டன்பிட்டி கிராமம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.விஜயவாசகன் 


யாழ். சாவகச்சேரி – பருத்தித்துறை முதலாம் ஒழுங்கையிலுள்ள கொட்டன்பிட்டி  கிராமத்தில் கசிப்பு உற்பத்தியை பிரதான தொழிலாகக் கொண்ட 15 குடும்பங்களும், தாங்கள்  இதுவரை காலமும்  மேற்கொண்டுவந்த கசிப்பு உற்பத்தியை  கைவிடுவதாக  உறுதியளித்துள்ளனர்.

கொட்டன்பிட்டி கிராமத்திலுள்ள இளைஞர், யுவதிகள், கிராம அலுவலர் க.கார்த்திகேயன், சாவகச்சேரி நகராட்சிமன்ற உறுப்பினர் அ.பாலமயூரன் ஆகியோரின் தலைமையில் கசிப்பு உற்பத்தி செய்யும் மக்களுடன் செவ்வாய்க்கிழமை (15) கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போதே இவர்கள் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக கொட்டன்பிட்டி கிராம அலுவலர் க.கார்த்திகேயன் தெரிவித்தார். 

கசிப்பு உற்பத்தியை கைவிடுமாறு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இக்குடும்பங்களிடம்  கொட்டன்பிட்டி  இளைஞர், யுவதிகள்  வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கசிப்பு உற்பத்தியை கைவிடுவதாக 6 பேர் நேரடியதாக உறுதியளித்ததுடன், ஏனையோரும் இதற்கான உறுதியை அளித்துள்ளனர்.  இந்நிலையில்,  தங்களது வாழ்வாதாரத்திற்கும் பிள்ளைகளின் கல்விக்கும் உதவி செய்யுமாறும் இவர்கள் கோரியுள்ளதாகவும் க.கார்த்திகேயன் கூறினார்.

வெளிநாடுகளிலுள்ள உறவுகள், சமுர்த்தி, நகராட்சிமன்றம் ஆகியவற்றினூடாக வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமென தான் கூறியதாகவும் க.கார்த்திகேயன் கூறினார்.

மேலும், கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்காக  கொட்டன்பிட்டி இளைஞர், யுவதிகளைக் கொண்ட 05  பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .