2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் கண்டர் ரக வாகனமும் வியாழக்கிழமை (01) நேருக்கு நேர் மோதியதில் சிறுமியொருவரும் பெண்ணொருவரும்  படுகாயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அல்வாயினைச் சேர்ந்த விஜந்தன் ஜேசுதாஸன் விஜிதா (08), விஜந்தன் ஜேசுதாஸன் ஜெயந்தா (28) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

குறுக்கே பாய்ந்த நாயை விலத்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த கண்டர் ரக வாகனத்துடன்  மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X